search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்"

    பூதங்குடியில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கடந்த 28-ந்தேதி அனுக்ஞை, வாஸ்து யாகம், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    இதை தொடர்ந்து 29-ந்தேதி காலை முதல் கால யாகசாலை பூஜையும், மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடைபெற்றது.

    நேற்று காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதையடுத்து கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 9.30 மணிக்கு அங்கிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து பரிவார தெய்வமான சுதர்சனர், யோக நரசிம்மர், அய்யப்பன், ராமபாதம், நவகிரகங்கள் மற்றும் நாக கண்ணி, தும்பிகை ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை ஆச்சாரியார் பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நடத்தினர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மறைந்த பி.டி. ஜெயராமன் குடும்பத்தை சேர்ந்த டாக்டர் மோகன், என்ஜினீயர் மனோகரன், கலையரசன் ஆகியோர் தலைமையில் ராசகண்ணு, ஆத்மநாபான், சுந்தரவதனம், பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் கோவில் சிற்ப வடிவமைப்பு மற்றும் சிற்பகலை ஏற்பாடுகளை அரங்கப்பன் செய்திருந்தார்.

    விழாவில் அருண்மொழி தேவன் எம்.பி., பாண்டியன் எம்.எல்.ஏ., ஜோதி பிரகாஷ், விநாயகம், ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு வியாபாரி சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன், மகாலிங்கம், ஆனந்தபாபு, குஞ்சிதபாதம், கலைவாணன், மணிகண்டன், நன்மாறன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர், பி.டி. ஜெயராமன் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆர்.கே. செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    ×